ஒரே நாளில் புதிதாக 117 பேர் பலி: கனடாவில் அதிகரிக்கும் எண்ணிக்கை
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 30 இலட்சத்து 89 ஆயிரத்து 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 34 ஆயிரத்து 329 பேர் மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 1 இலட்சத்து 97 ஆயிரத்து 848 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், covid19 தொற்றால் 1,140 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 336 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 28 இலட்சத்து 57 ஆயிரத்து 164 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.