53 பேர் பரிதாப மரணம்! இறப்பதற்கு முன் சந்தோஷமாக ஆடிப் பாடும் வீடியோ காட்சிகள்
இந்தோனேசிய ராணுவ நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினர் கப்பல் மூழ்குவதற்கு முன்பு கடைசியாக பிரியாவிடை பாடல் ஒன்றை பாடுவது தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.
குறித்த நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சியானது சம்பவம் நடக்கும் சில நாட்கள் முன்னர் பதிவானதாக கூறப்படுகிறது.
கடற்படை வீரர் ஒருவர் தமது கிட்டாரில், இந்தோனேசியாவில் பிரபலமான பிரியாவிடை பாடல் ஒன்றை வாசிக்க, எஞ்சிய வீரர்கள் அந்த நபரை சூழ்ந்து கொண்டு, குறித்த பாடலை இணைந்து பாடுகின்றனர்.
குறித்த வீடியோ பதிவு செய்யப்பட்ட சில நாட்களில், அந்த நீர்மூழ்கிக் கப்பலானது மீட்க முடியாத ஆழத்தில் மூழ்கி, மொத்த வீரர்களையும் காவு வாங்கியது.
மீட்புக் குழுவினரால் தற்போது முக்கிய பாகங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், குறித்த வீடியோ பதிவும் சிக்கியுள்ளது. கப்பல் கண்டெடுக்கப்பட்ட ஆழமானது கண்டிப்பாக வீரர்கள் எவரையும் உயிருடன் மீட்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் உதவியுடன், நாளுக்கு 24 மணி நேரமும் தீவிரமாக தேடிய நிலையிலேயே, நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை கண்டெடுக்க முடிந்துள்ளது,
கப்பல் மாயமான நான்கு நாட்களுக்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை கடற்படை தளபதி, அந்த துயர சம்பவத்தை உறுதி செய்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றபோதும், திடீரென்று ஏற்பட்ட கோளாறினால், கப்பல் மேற்பரப்பில் வர முடியாமல் போனது என மட்டும் தெரிவித்துள்ளனர்.