பிரான்ஸில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் தலைநகர் பாரிஸில் எரிபொருள் தட்டுப்பாட்டு சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சிலர் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, அதிக விலைக்கு பெற்றோல் விற்ற ஐவர் கொண்ட குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். இக் கைது Val-de-Marne மாவட்டத்திற்குட்பட்ட Arcueil நகரில் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
19 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட ஐவர் கொண்ட குழு அதிக விலைக்கு பெற்றோல் விற்றுள்ளனர். சுமார் இருபது கேன்கள் பொருத்தப்பட்டு இந்த எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையின் பின்னணியில் தந்திரமாக பெட்ரோல் விற்றதற்காக கைது செய்யப்பட்டு குறித்த இளைஞர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர் 20 கொள்கலன்களில் பெற்றோல் நிரப்பி, ஒரு லிட்டர் பெற்றோல் 3.50 யூரோக்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இத்தகவலை அறிந்துகொண்ட பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லிட்டர் பெற்றோல் பறிமுதல் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் எரிபொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வருகிறது. திங்கட்கிழமை நிலவரப்படி இல் து பிரான்சுக்குள் எரிபொருள் இல்லாமல் 40% வீதமான நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இதேவேளை, இல் து பிரான்ஸ் உட்பட பல பகுதிகளில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்களை குறி வைத்து எரிபொருள் விற்பை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக விலையில் விற்பனை செய்யப்படும் எரிபொருளை மக்கள் அவசர தேவைக்காக பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.