சீனாவில் மனைவியை எரித்துக்கொன்ற கொடூர கணவன்
சீனாவைல் மனைவியை முன்னாள் கணவர் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Lhamo என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் இணையத்தில் நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் Lhamo ஒரு நிகழ்ச்சியை நேரலையில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தபோது Lhamo-ன் அறைக்குள் முன்னாள் கணவர் நுழைந்துள்ளார்.
அங்கு அவர் திடீரென Lhamo மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததனால் பலத்த காயமடைந்த Lhamo 2 வாரங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் Lhamo -ன் முன்னாள் கணவரான Tang Lu காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் Tang Lu மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு கடந்த வியாழனன்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிபதி தீர்ப்பு வழங்கியதுடன் இதுபோன்று கொடூரமாக செயல்படும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.