புதிய கிரிப்டோ செயலி மோசடி: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு என அச்சம்
கிரிப்டோ செயலி மூலமாக இன்னொரு மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கிரிப்டோ வர்த்தகத்தில் Bot எனப்படும் ஒருவகை வர்த்தகம் வாடிக்கையாளர்களால் முன்னெடுக்கப்படுவதுண்டு. குறிப்பிட்ட நிறுவனங்களின் Bot மென்பொருளை பயன்படுத்தி பலமடங்கு வருவாய் ஈட்டுவதே வாடிக்கையாளர்களின் நோக்கம்.
ஆனால் அப்படியான ஒரு Bot மென்பொருளை பயன்படுத்தியுள்ள வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் சேமிப்பு மொத்தத்தையும் இழந்ததாக புகார் அளித்துள்ளனர். விசாரணை முன்னெடுக்கப்பட்டதில், இதுவரையான கிரிப்டோ மோசடிகளில் மிகப்பெரிய ஒன்று இதுவென குறிப்பிட்டுள்ளனர்.
ருமேனியா நாட்டில் இருந்தே இந்த மோசடி தொடர்பில் முதலில் புகார் வெளியாகியுள்ளது. பலர் தங்களின் பல நூறு யூறோ தொகையை iEarn நிறுவனத்தை நம்பி இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
iEarn நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Bot மென்பொருளை பயன்படுத்திய வாடிக்கையாளர்களே தங்கள் பணத்தை இழந்துள்ளனர். ருமேனியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தற்போது தங்கள் தொகையை பெற முடியாமல் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், iEarn நிறுவனம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டதில், அந்த நிறுவனத்திற்கு உலகம் எங்கிலும் இருந்து 800,000 வாடிக்கையாளர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தொடக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆதாயம் அளித்து வந்த இந்த நிறுவனம், மக்கள் அதிக முதலீடு செய்யவும், அந்த நாட்டில் தங்கள் சேவையை முடக்குவது இந்த நிறுவனத்தின் வாடிக்கை என அம்பலமாகியுள்ளது.
தற்போது பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த iEarn நிறுவனத்தால் பெருந்தொகையை இழந்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.