ரயில் மோதி ஆபத்தான நிலையில் இளைஞர்: பொலிஸ் வெளியிட்ட தகவல்
விக்டோரியா பார்க் சுரங்க ரயில் மோதி இளைஞர் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாக கல்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயம்பட்ட நபருக்கு 28 வயது எனவும், அதிகாலை 3 மணியளவில் தெற்கே செல்லும் சி ரயிலில் மோதியபோது அந்த நபர் நிலையத்தின் வடக்கே சுரங்கப்பாதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், மது அருந்தியிருந்த நிலையிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கல்கரி பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விபத்தில் அவருக்கு ஆயுட்கால பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
அதிகாலை நடந்த விபத்தை அடுத்து அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கு அவர் சனிக்கிழமை பிற்பகல் வரை ஆபத்தான நிலையில் இருந்தார் என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர்.