பத்து நிமிடத்துக்கு ஒருவர்... பிரான்ஸ் சுகாதார அமைச்சர் விடுக்கும் எச்சரிக்கை
பிரான்சில் தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றதாக சுகாதார அமைச்சர் Olivier Véran அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பிரான்ஸ் சுகாதார அமைச்சர் Olivier Véran, சில முக்கிய தரவுகளை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில், பிரான்சில் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்திற்கு தேவையான தடுப்பூசிகள் வருகையை எதிர்பார்க்கவும் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாள் தோறும் 600,000 ல் இருந்து 700,000 வரையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன என குறிப்பிட்ட அமைச்சர் Olivier Véran, 300 தடுப்பூசி நிலையங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி முன்பதிவு செய்துகொண்டுள்ளவர்கள் அனைவருக்கும் ஜனவரி 15 ம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதை புதிய மாறுபாடு தொடர்பில் மக்கள் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், பிரன்சில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றதாகவும் தெரிவித்தார்.
புதிய ஓமிக்ரான் தொற்றானது பிரான்சில் 9 பேர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,
சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.