கனடாவில் வீடு புகுந்து தாக்கப்பட்ட தந்தை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
கனடாவின் ஹாமில்டன் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து ஒருவரை கடத்திச் சென்றதுடன் அவரது இரு மகன்களை துப்பாக்கியால் தாக்கிவிட்டு மாயமாகினர்.
இந்த விவகாரத்தில் தற்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்ட ஃபகீர் அலி என்ற 63 வயது நபரை உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக ஹாமில்டன் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மவுண்ட் ஹோப்பில் உள்ள கிளாங்காஸ்டர் சாலை மற்றும் டிக்கென்சன் சாலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து அலி வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார் என்று பொலிசார் தெரிவித்தனர்.
மட்டுமின்றி, மர்ம நபர்கள் வீடு புகுந்து அலியின் இரு மகன்களையும் துப்பாக்கியால் தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதுடன், இன்னொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
இது திட்டமிடப்பட்ட தாக்குதல் சம்பவமாகவே பொலிசார் கருதுகின்றனர். இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தின் நோக்கம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், தாக்குதலுக்கு இலக்கான குடும்பமானது பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தவர் எனவும், அவர்கள் தொடர்பில் பொலிசாருக்கு இதற்கு முன்னர் எந்த புகாரும் வந்ததில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபகீர் அலி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டாலும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவே பொலிஸ் தரப்பு நம்புகிறது. மேலும், ஃபகீர் அலியின் குடியிருப்புக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணை முன்னெடுத்த பின்னரே இந்த வழக்கில் அடுத்த நகர்வு குறித்து முடிவு செய்ய முடியும் என்கிறார்கள் பொலிஸ் தரப்பு. மட்டுமின்றி, பொதுமக்கள் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து விலகி இருப்பது பாதுகாப்பானது எனவும் தெரிவித்துள்ளனர்.
https://canadamirror.com/article/missing-after-violent-kidnapping-in-hamilton-1631800091