இந்தியாவுக்கு சென்ற கனேடியர் உயிரிழந்ததாக தகவல்: சினிமா போல நீடிக்கும் ஒரு மர்மக் கதை
இந்தியாவுக்கு தேனிலவுக்குச் சென்ற கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி உயிரிழந்ததாக வெளியான தகவலால், நிறுவனத்தில் முதலீடு செய்த 215 மில்லியன் டொலர்கள் என்ன ஆனது என்ற விடயம் வெறும் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
வான்கூவரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான QuadrigaCXஇன் தலைமை செயல் அதிகாரி Gerald Cotten. ஒரு காலகட்டத்தில் கிரிப்டோகரன்சி என்னும் விடயம் பரபரப்பாக பேசப்பட்டபோது, மக்கள் அந்நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
மக்களுடைய பணம் 215 மில்லியன் டொலர்கள் நிறுவனத்தில் சேர்ந்த நிலையில், தனது தேனிலவுக்காக தனது மனைவி Jennifer Robertsonஉடன் இந்தியாவுக்கு சென்றார் Gerald.
ஆனால், அவர்கள் இந்தியா சென்று ஒரு மாதம் ஆன நிலையில், Gerald உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக அவரது மனைவி அறிவித்தார்.
சிவாஜி சினிமாவில் வருவதுபோல, Geraldஇன் கணினியை அவரது மனைவியால் கூட இயக்க முடியாமல் போன நிலையில், அவரது நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட மக்கள் பணம் 215 மில்லியன் டொலர்கள் முடங்கிப்போனது.
அந்த பணத்தை எப்படி மீட்பது என தெரியாமல் மக்கள் குழம்பிப்போனார்கள். இன்று வரை அந்த பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் புதிதாக ஒரு கேள்வி எழுந்தது.
இதேபோல் பணம் முடங்கிய சில குற்ற வழக்குகளில், குற்றவாளி இறந்ததாக பொய்யான ஒரு தகவலை பரப்பிவிட்டு சம்பந்தப்பட்டவர் அந்த பணத்துடன் மாயமான சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆக, அதேபோல் Geraldம் இந்தியாவுக்கு போனபோது இறந்ததாக பொய்யான தகவலை பரப்பிவிட்டு வேறெங்காவது போய் தலைமறைவாகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், Geraldஇன் உடலை தோண்டி எடுக்கவேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் Dead Man's Switch a crypto mystery என்ற ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் Gerald குறித்த பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளன.
படத்தின் இயக்குநரான Sheona McDonaldம் ஏற்கனவே இந்த கிரிப்டோகரன்சி மோசடியில் சிக்கியவர் என்பதால், அது குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் வகையிலும் அந்த படத்தை உருவாக்கியுள்ளார்.