பொதுமக்களை நடுங்க வைத்த பட்டப்பகல் துப்பாக்கிச் சூடு
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Coquitlam பகுதியில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சனிக்கிழமை பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மொத்தம் ஆறு முறை துப்பாக்கி சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சி மாறாமல் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பில் அமைதியாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
ஒரு வாகனம் அருகே உடல் ஒன்று கிடப்பதாக கண்டதாகவும், அதன் அருகாமையில் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டிருந்தது காண நேர்ந்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் பொலிசார், இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என உறுதி செய்துள்ளனர்.