இறப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டக் கூடும்
மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, சனிக்கிழமையன்று (மார்ச் 29) அந்நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக இறப்பு எண்ணிக்கை 1,002 ஐ எட்டியுள்ளது, 2,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என்று ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் இறப்பு எண்ணிக்கை 10,000 ஐ தாண்டக்கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்தையும் பாதித்தது, பாங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த 33 மாடி வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.