அமெரிக்காவில் சின்னம்மையின் வேகத்தில் பரவும் டெல்டா!
அமெரிக்காவில் டெல்டா கொரோனாவைரஸனது சின்னம்மையின் வேகத்தில் பரவுகின்றதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான நிலையத்தின் உள்ளக ஆவணத்தை அடிப்படையாக வைத்து சிஎன்என் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் பகிரப்படாத அந்த ஆவணம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் வேகத்தில் டெல்டா வைரசினை பரப்பக்கூடும் என தெரிவித்துள்ளதாக சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்தின் இயக்குநர் ரொச்செலே வலென்ஸ்கி இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் சரியானவை என தெரிவித்துள்ளார்.
இது பாரதூரமான விடயம் நாங்கள் நீலிக்கண்ணீர் வடிக்கவில்லை என்பதை மக்கள் உணரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், மிகவும் வேகமாக பரவக்கூடிய நோய் இது எனவும் அவர் கூறினார்.
எனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் உள்ளகப்பகுதிகளில் முகக்கவசத்தை அணியவேண்டும் எனவும், ,பாடசாலைகளிலும் அனைவரும் முகக்கவசங்களை அணியவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.