கனடா மருந்தங்களில் ஒரு குறிப்பிட்ட மருந்துக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி... அது என்ன மருந்து?
கனடாவில் சில மாகாணங்களில் குறிப்பிட்ட மருந்து ஒன்றிற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஆல்பர்ட்டாவிலுள்ள கால்நடைகளுக்கான தீனி விற்கும் கடைகளிலிருந்து, மருந்தகங்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரை மக்கள் தங்களிடம் அந்த மருந்தை கேட்பதாக தெரிவித்துள்ளார்கள்.
அந்த மருந்தின் பெயர் ivermectin. அப்படி அந்த மருந்தில் என்ன விசேஷம், மக்கள் ஏன் அந்த மருந்தை தேடுகிறார்கள்.
அந்த மருந்து கால்நடைகளுக்கு, குறிப்பாக குதிரைகளுக்கு குடலில் பூச்சி இருந்தால், அதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். சரி, அந்த மருந்தை தற்போது ஏன் மக்கள் அதிகம் தேடுகிறார்கள்?
அதாவது, ivermectin என்ற அந்த மருந்து கொரோனாவைக் குணப்படுத்துவதாக சில தவறான தகவல்கள் பரவியுள்ளன.
ஆகவே, அதை உண்மையென்று நம்பி மக்கள் அந்த மருந்தை வாங்க விழைகிறார்களாம்.
ஆனால், அது மனிதர்களுக்கான மருந்தே அல்ல என்று கூறும் மருத்துவர்கள், மனிதர்கள் மீது சோதனை செய்யப்படாத மருந்துகளை நீங்களாக வாங்கி உட்கொள்ளாதீர்கள், அது ஆபத்தை விளைவிக்கலாம் என எச்சரிக்கிறார்கள்.
ICYMI: These are the FACTS about Ivermectin:
— Saskatchewan Health Authority (@SaskHealth) July 23, 2021
* it's a drug used to treat/prevent parasites in animals
* it's not approved in #Sask for treating or preventing COVID-19 in humans
* it's not an anti-viral (anti-virals treat viruses. COVID-19 is a virus.)
* large doses can cause harm pic.twitter.com/ovn9yjU7e5