டெங்கு பரவலைக் 77 சதவீதம் கட்டுப்படுத்தும் பக்டீறியாவைக் ஆய்வில் கண்டறிந்த விஞ்ஞானிகள்
வொல்பாக்கியா பக்டீறியா ஆனது நுளம்புக்கு தீங்கிழைக்க மாட்டாது. ஆனால், டெங்கு வைரஸ் உட்புகுவதற்குத் தேiவாயான நுளம்பின் உடற்பாகங்களிலேயே இந்த பக்டீறியாவும் தங்கியிருக்கும்.
இந்த பக்டீறியா வளங்களுக்காக போராடுவதால் டெங்கு வைரஸ் பெருகுவது மிகக் கடினமாகிவிடும். ஆதனால், அந்நுளம்பு மீண்டும் மனிதர்களைக் கடிக்கும்போது டெங்கு பரவலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு குறைகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சோதனைகளுக்காக வொல்பாக்கியா பக்டீறியா தொற்றுடைய 5 மில்லியன் நுளம்பு முட்டைகள் பயன்படுத்தப்பட்டன.
நியூ இங்லண்ட் ஜேர்னல் ஒவ் மெடிசின் (New England Journal of Medicine) எனும் மருத்துவச் சஞ்சிகையினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி, இத்திட்டத்தின் மூலம் குறித்த பகுதியில் டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை 77 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை 86 சத வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
இப்பெறுபேறு மிக உற்சாகம் அளிக்கிறது என டாக்டர் கெத்தி அண்டேர்ஸ் கூறியுள்ளார். டெங்கு ஒரு பெரும் சுகாதாரப் பிரச்சினையாகவுள்ள, உலகின் பெரிய நகரங்களில் இத்திட்டத்தை அமுல்படுத்தினால் இதைவிட சிறந்த தாக்கம் ஏற்படும் என நாம் எண்ணுகிறோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
1970 ஆம் ஆண்டில் உலகில் 9 நாடுகளில் மாத்திரமே கடுமையான டெங்குப் பரவல் கடுமையாக இருந்தது. தற்போது வருடாந்தம் 400 மில்லியன் பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.