மொபைல்போன் இல்லை என்பதால் மருத்துவ சிகிச்சை மறுப்பு: கொந்தளித்த ஒன்ராறியோ நபர்
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையை நாடிய நபருக்கு, மொபைல்போன் இல்லை என்பதால் சிகிச்சை மறுக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மிசிசாகா பகுதியில் குடியிருக்கும் Pete Vojeckis என்பவரே, மொபைல்போன் இல்லை என்பதால் மருத்துவமனை ஒன்று சிகிச்சை அளிக்க மறுத்ததை எதிர்கொண்டவர்.
கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக Pete Vojeckis சம்பவத்தின் போது காத்திருக்கும் அறையில் இருந்து வெளியேறி வாகன நிறுத்துமிடத்திலேயே காத்திருந்துள்ளார்.
ஆனால் தமக்கு ஏற்பட்ட அனுபவம் உண்மையில் ஏமாற்றமளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பல காரணங்களால் பலர் மொபைல்போன் பயன்படுத்துவதில்லை.
இதனால் அவர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவது முறையா என்ற கேள்வியை Pete Vojeckis முன்வைத்துள்ளார். கடந்த வாரம் ஏற்பட்ட சிறு விபத்தால் கையில் காயம்பட்ட Pete Vojeckis, மருத்துவமனை ஒன்றில் நேரடியாக சென்றுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றுவதால், வெளியே காத்திருக்க வேண்டும் எனவும், உரிய நேரத்தில் தகவல் தெரிவிப்பதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் தம்மிடம் மொபைல்போன் இல்லை என்றதும், அவர்கள் அருகாமையில் உள்ள இன்னொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே அந்த மருத்துவமனைக்கு செல்லாமல் நேரடியாக Pete Vojeckis இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை தேடி வந்த நிலையில், தற்போது அதே மருத்துவமனைக்கு திருப்பி அனுப்புவதற்கான காரணம் என்ன என Pete Vojeckis விசாரித்துள்ளார்.
ஆனால் தகவல் தெரிவிக்க மொபைல்போன் இல்லை என பதில் அளித்துள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றி தம்மை நேரடியாகவே அழைக்கலாம் என வாதிட்டும், அந்த மருத்துவமனை ஊழியர்கள் ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வேறு வழியின்றி Pete Vojeckis தமது குடும்ப மருத்துவரையே சிகிச்சைக்காக நாடியுள்ளார்.