தாக்குதல் தொடர்பில் மனம் திறந்த டென்மார்க் பிரதமர்!
டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் கோபென்ஹாகென் சென்றிருந்த போது, மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த சம்பவத்தில் பிரதமரை தாக்கிய 39 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜூன் 20 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தாக்கப்பட்ட பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், பிரதமரின் கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன்,
"அன்று நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததேன்.
இருப்பினும், தற்போது நலமாகவே இருக்கிறேன். எனக்காக குரல் கொடுத்தவர்கள், ஊக்கமளித்தவர்களுக்கு நன்றி," என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சமயத்தில் தனது குடும்பத்தாருடன் இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.