இந்த நாட்டில் கடைபிடிக்கப்படும் வித்தியாசமான கொள்கைகள்! என்ன தெரியுமா?
ஜெர்மனியில் நெடுஞ்சாலையில் செல்லும் போது வண்டியில் டீசல் தீர்ந்துவிட்டால் அபராதம் அல்லது தண்டனைகள் வழங்கப்படுகிறது.
சில நாடுகளில் வித்தியாசமான தவறுகளுக்கு மக்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் ஒன்று தான் ஜெர்மனி நாடு. பொறியியல் துறையில் உலகிலே தலை சிறந்த நாடாக விளங்குகிறது.
இந்த நாட்டை குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை சொல்லி கொண்டே போகலாம். இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள நெடுஞ்சாலையில் காரை வேகமாக ஓட்டி செல்லலாம்.
ஆனால் அப்படி செல்லும் போது உங்கள் வண்டியில் டீசல் தீர்ந்து விட்டால் அது குற்ற செயலாக கருதப்படுகிறது. இந்த குற்றத்திற்கு அபராதம் அல்லது அதற்குரிய தண்டனைகள் வழங்கப்படும்.
பொதுவாக தொலைபேசியில் பேச தொடங்குவதற்கு முன்பு அனைவரும் ஹலோ என்று தான் பேச தொடங்குவோம். ஆனால் ஜெர்மனியை சேர்ந்த மக்கள் நேரடியாக அவர்களது பெயரையே அழைத்து பேச தொடங்குவார்கள்.
அதுபோல பிறந்தநாளுக்கு முன்கூட்டியே வாழ்த்து சொல்லும் பழக்கம் அங்கு இல்லை. அப்படி சொல்வது துரதிர்ஷ்டமாக கருதுகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பிறந்தநாளில் மட்டும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.