700 ஆண்டுகால ஸ்பெயின் அரச கல்லறைக்குள் அதிர்ச்சி; எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள்!

Spain
By Sulokshi Jul 22, 2026 11:06 AM GMT
Report

  ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘சாண்டா மரியா டி பெட்ரால்பஸ்’ (Santa Maria de Pedralbes) மடாலயத்தில், 700 ஆண்டுகள் பழமையான அரச கல்லறைகளைத் திறந்து தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

14-ஆம் நூற்றாண்டில் அரசி எலிசெண்டா (Queen Elisenda) என்பவரால் நிறுவப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்தின் 700-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், இதுவரை சொல்லப்பட்டு வந்த வரலாற்றுப் பதிவுகளுக்கு முற்றிலும் மாறான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

700 ஆண்டுகால ஸ்பெயின் அரச கல்லறைக்குள் அதிர்ச்சி; எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள்! | Discovery Inside A 700 Year Old Spanish Royal Tomb

 9 நபர்களின் எலும்புக்கூடுகள்

வரலாற்று ஏடுகளின்படி, வீரத் தளபதியான ஆர்டாவ் டி ஃபோசெஸ் (Artau de Foces) என்பவரின் கல்லறை என நினைத்துத் திறக்கப்பட்ட இடத்தில், ஒரு ஆண் எலும்புக்கூடு கூடக் கிடைக்கவில்லை.

மாறாக, அங்கு இரண்டு பெண்களின் உடல்களும், மூன்று குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டன. அ தில் ஒரு பெண்ணின் மண்டையோட்டுடன் 700 ஆண்டுகள் கடந்தும் சடை போட்ட கூந்தல் (Ponytail) அப்படியே சிதையாமல் மம்மியாகி இருந்தது தொல்லியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அதைவிடப் பெரிய அதிர்ச்சியாக, அரசியின் உறவினரும் மடாலயத்தின் தலைவியுமான பிரான்செஸ்கா என்பவரின் கல்லறையை ஆய்வு செய்த போது, அங்குப் பல்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த 9 நபர்களின் எலும்புக்கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிரிழந்த 4 ஆண்களின் மண்டையோடுகளும், பிரசவத்தின் போதே இறந்து போன ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் மம்மியான உடலும் கண்டெடுக்கப்பட்டன.

அந்தப் பெண்ணின் பிரசவப் பாதையிலேயே 22 வாரக் கருவின் எலும்புகள் சிக்கியிருந்த காட்சி ஆராய்ச்சியாளர்களை உரைய வைத்தது. மடாலயத்தின் நிறுவனர் அரசி எலிசெண்டாவின் உடலும் மரப்பெட்டிக்குள் வைத்துப் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்துக்கான ஆடம்பரத்துடன் புதைக்கப்படாமல், எளிய துறவி உடையில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது, அவரது ஆன்மீக வாழ்க்கை முறைக்குச் சான்றாக உள்ளது.

இந் நிலையில் அரச கல்லறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட ஆண்களின் உடல்களும், பெண்களும், குழந்தைகளும் எப்படி வந்தார்கள் என்ற வரலாற்றுப் புதிரை அவிழ்க்க, மரபணு (DNA) மற்றும் கார்பன் ரேடியோ சோதனைகளைத் தொல்லியல் வல்லுநர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US