கனடாவில் மீண்டும் பூர்வக்குடி மாணவர்களின் கல்லறை கண்டுபிடிப்பு
கம்லூப்ஸ் இந்திய உண்டுறை பள்ளியில் கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தெற்கு Saskatchewan பகுதியில் கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது கொடூரமானது மட்டுமின்றி அதிர்ச்சியூட்டும் சம்பவம் என பூர்வக்குடி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் மேரிவல் இந்தியன் உண்டுறை பள்ளியில் உள்ள இந்த கல்லறைகள் கனடாவில் இன்றுவரை காணப்பட்டுள்ள மிகவும் அதிர்ச்சியூட்டும் விவகாரமாக இருக்கும் என பூர்வக்குடி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மேரிவல் இந்தியன் உண்டுறை பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்லறை தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேரிவல் (Cowessess) பள்ளியானது 1899 ல் ரோமன் கத்தோலிக்க மிஷனரிகளால் கட்டப்பட்டது. 1901 முதல் கனேடிய நிர்வாகம் குறித்த பள்ளிக்கான நிதியுதவிகளை முன்னெடுத்து வந்தது.
தொடர்ந்து 1969 முதல் பள்ளியின் நிர்வாக பொறுப்பை கனேடிய நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. 1997ல் குறித்த பள்ளியானது மூடப்பட்டுள்ளது.