காசாவில் நோய்கள் பரவும் அபாயம்; ஐ நா எச்சரிக்கை
காசாவில் நீரினால் பரவும் நோய்கள் அபாயம் இருப்பதாக பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காசாவின் கடைசியாகச் செயல்படும் கடல்நீரை உப்புநீக்கும் ஆலை இன்று மூடப்பட்டுள்ளதுடன் நீரை தூய்மையாக்கும் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
நீரிழப்பு மற்றும் நீரினால் பரவும் நோய்கள்
இதன் காரணமாக நீரிழப்பு மற்றும் நீரினால் பரவும் நோய்கள் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளை தெற்கு காசாவின் சில பகுதிகளில் இன்று மூன்று மணிநேரம் நீர் கிடைத்த போதும் அவை அந்தப் பகுதியில் உள்ள மக்களில் 14 சதவிகிமாணவர்களுக்கு மட்டுமேபோதுமானதாக இருந்ததாகவும் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் 10 நாட்களை கடந்து நீடித்துவரும் நிலையில் , காஸாவில் நீர் மற்றும் உணவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.