வெட்டி நொறுக்கப்பட்ட உடல்... 50,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்
கனடாவின் ஒன்ராறியோ பிராந்தியத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக கொல்லப்பட்ட நபர் தொடர்பான வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில், தற்போது 62 வயதான நபர் கைதாகியுள்ளதுடன், அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் போல்டன் பகுதியை சேர்ந்த 45 வயது Morris Conte என்பவர் 2010 மே மாதம் மாயமானதை அடுத்து, அவரது உடல் வெட்டி நொறுக்கப்பட்ட நிலையில் மூன்று பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை முன்னெடுத்துவந்த பொலிசார் 2011ல் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர். இந்த நிலையில், தற்போது Woodbridge பகுதியை சேர்ந்த 62 வயது நபரை கைது செய்துள்ளதாகவும், அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை வழக்கு தொடர்பில் உரிய தகவலை அளிக்கும் நபர்களுக்கு 50,000 டொலர் வெகுமதி அளிக்கப்படும் என்பது, தொடர்ந்து நீடிக்கும் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.