இலங்கைக்கு செல்ல வேண்டாம்; அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு செல்லவேண்டாம் என அமெரிக்க தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.
அதற்கமைய, இந்த வாரம் மேற்கொண்ட மதிப்பாய்வு நடவடிக்கையை அடுத்து 4 ஆம் எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா இலங்கையினை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் ஜப்பானுக்கான அனைத்து பயணங்களையும் அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் எச்சரித்துள்ளது.
குறித்த நாட்டிற்குச் செல்ல வேண்டியவர்கள் அங்கு பயணம் செய்வதற்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.
ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.