பணத்திற்காக இப்படியெல்லாம் செய்வாங்களா?
பாம்புகள் நிறைந்த பாத் டப்பில் இருக்கும் இளைஞர் குறித்த காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் முன்னணி யூடியூப் சேனல் ஒன்று 14 நிமிடங்கள் கால அளவிலான வீடியோவை வெளியிட்டு உள்ளது.
பாம்புகள் நிறைந்த பாத் டப்பில் சிறிது நேரம் இருப்பவர்களுக்கு, 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ. 7.5 லட்சம்) வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதில் 22 வயதான ஜிம்மி டொனால்டுசன், தனது இரண்டு நண்பர்களுடன் பங்கேற்று உள்ளார். இந்நிலையில் மற்ற இரண்டு நண்பர்கள், இந்த சவாலில் இருந்து பின்வாங்க, கடைசியாக வந்த தபர் மட்டும் இந்த சவாலில் பங்கேற்பதாக தெரிவித்தார்.
சவாலில் குறிப்பிட்டு உள்ளபடி, 30 வினாடிகள், பாம்புகள் நிரம்பிய பாத் டப்பில் இருந்து சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், பரிசுத் தொகையான ரூ. 7.5 லட்சத்தையும் வென்று ஜிம்மி டொனால்டுசன் சாதனை படைத்தார்.
இந்த வீடியோ, தற்போதுவரை 30 மில்லியன் முறை நெட்டிசன்களால் பார்க்கப்பட்டு உள்ள நிலையில், 1.2 மில்லியன் அளவிலான லைக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.