பெண் மருத்துவர் ஒருவருக்கு மொத்தமாக தடை விதித்த கனேடிய மாகாணம்
ஒன்ராறியோவில் தடுப்பூசிக்கு எதிராகவும் ஊரடங்கு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தும் வந்த மருத்துவர் ஒருவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவரின் வெளிப்படையான இந்த நடவடிக்கைகள் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் Rochagné Kilian என்பவரையே, தற்போது சிகிச்சை அளிப்பதில் இருந்து விலக்கியுள்ளனர்.
குறித்த மருத்துவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் இருந்து தமது வேலையை ராஜினாமா செய்து கொண்டார். இந்த நிலையில் ஒன்ராறியோவின் மருத்துவ நிர்வாகம், இனி அவர் மொத்தமாக சிகிச்சை அளிக்க முடியாதபடி தடை விதித்துள்ளது.
Rochagné Kilian உட்பட மூன்று மருத்துவர்கள், நோயாளிகளின் தனிப்பட்ட காரணங்களை குறிப்பிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இருந்து விலக்கு அளிப்பதற்கு தடை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.