பொறுப்பின்மை... பாதிப்பு அதிகரிக்கும்: ஆல்பர்ட்டா மருத்துவர்கள் எச்சரிக்கை
சுகாதார கட்டுப்பாடுகளில் மொத்தமாக தளர்வு ஏற்படுத்துவது பொறுப்பற்ற செயல் எனவும், இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் ஆல்பர்ட்டா மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய சூழலில் ஆல்பர்ட்டா நிர்வாகத்தின் முடிவுகள் தங்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாகவும், இது கோடை காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜூலை தொடக்கத்தில் அனைத்து பொது சுகாதார கட்டுப்பாடுகளையும் நீக்குவதை ஆல்பர்ட்டா மாகாணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால் ஆல்பர்ட்டா மாகாணத்தின் இந்த முடிவுக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முக்கிய நகரங்களில் கூட பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் தடுப்பூசி வழங்கப்படாத நிலையில், பாதிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தவே இந்த முடிவு வழிவகுக்கும் என எட்மண்டன் மருத்துவர் Shazma Mithani தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பலருக்கும் இரண்டாவது டோஸ் எப்போது என்ற தகவல் தெரியவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள அவர்,
தடுப்பூசி தொடர்பான மாகாண நிர்வாகத்தின் போக்கு கண்டிப்பாக நான்காவது அலைக்கு வாய்ப்பாக அமையும் என்றார்.