கர்ப்பிணிப் பெண்களை வலியுறுத்திய கனேடிய மாகாணம் ஒன்றின் மருத்துவர்கள்
ஒன்ராறியோ மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மகப்பேறு மருத்துவர்கள் மாகாணம் முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களுக்கான கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொள்ள நினைவூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் கொரோனா தடுப்பூசி விகிதம் ஒட்டுமொத்த தகுதியுள்ள மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மாகாணத்தில் 68 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்புடன் இருங்கள் என்றே வலியுறுத்துகிறோம் என மாகாண மருத்துவர்கள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது இரு உயிர்களுக்கு ஆபத்தாக முடியும் நிலை உருவாகும் என்றே மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.