சீனாவை தாக்கிய டோக்கரி புயலால் ஏற்பட்ட பாரிய சேதம்! எவ்வளவு தெரியுமா?
சீனாவில் டோக்சுரி புயலால் ரூ.493 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதன்படி, சீனாவின் புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறித்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் பலத்த சேதமடைந்தன. சுமார் 6 ஆயிரம் எக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.