றொரன்டோவில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு; ஏன் தெரியுமா
றொரன்டோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நகரின் பொதுப் போக்குரத்து சேவைகளில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
போக்குவரத்து கட்டமைப்புகளை அண்டிய பகுதிகளில் ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளதாக றொரன்டோ பொலிஸ் பிரதானி மெய்ரோன் டெம்கிவ் தெரிவிக்கின்றார்.
பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்தும் பயனர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு கூடுதல் கரிசனை காண்பிக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
ரீ.ரீ.சீ போக்குவரத்து கட்டமைப்பின் பாதுகாப்பு கடமைகளுக்காக நாளாந்தம் 80 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் 16 வயது சிறுவன் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் வன:முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் இதற்கு உடனடி தீர்வு திட்டங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் அடிப்படையில் நகரம் முழுவதும் குறிப்பாக பொதுப் போக்குவரத்து கட்டமைப்புக்களை மையப்படுத்திய பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.