அத்தியாவசியமற்ற பயணம்... பி.சி. பிரதான சாலைகளில் பொலிசார் நடவடிக்கை
பிரிட்டிஷ் கொலம்பியா பிரதான சாலைகளில் அத்தியாவசியமற்ற பயணம் மேற்கொண்ட சுமார் 103 வாகனங்களை தடுத்து நிறுத்தி பொலிசார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் பிரிட்டிஷ் கொலம்பியா பிரதான சாலைகளில் பொலிசார் தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளனர்.
அத்தியாவசியமற்ற பயணம் மேற்கொண்ட சுமார் 103 வாகனங்களை பொலிசார் திருப்பி அனுப்பியுள்ளனர். வெள்ளிக்கிழமை 55 வாகனங்களும் சனிக்கிழமை 48 வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், வாகன சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற இரு வாகனங்களுக்கு 250 டொலர் பிழை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை வாகன சோதனைகள் முன்னெடுக்கப்படாது என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள மூன்று சுகாதார மண்டலங்களுக்கு இடையே அத்தியாவசியமற்ற பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரப் பகுதிகளுக்கு இடையிலான மாகாண பயணக் கட்டுப்பாடுகள் வார இறுதிக்குப் பிறகும் அமுலில் இருக்கும்.
கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 575 டொலர் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.