தண்ணீரை சேமியுங்கள்... பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு அறிவுறுத்தல்
மழை அளவு குறைந்து வெப்ப அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் இனி வரும் நாட்களில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெரும்பகுதியை வறட்சி பாதிக்கும் நிலை காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வான்கூவர் தீவில் நீர் பற்றாக்குறை காணப்படுகிறது. மட்டுமின்றி, முழு தாம்சன்-நிக்கோலா பகுதி, கரிபூ, சுஸ்வாப் மற்றும் ஒகனகன் பகுதிகளில் நீர் வரத்தும் குறைந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா வறட்சி அளவில் 5 என பதிவாகியுள்ளது, இது மிக ஆபத்தான அளவு என கூறப்படுகிறது. கிழக்கு வான்கூவர் தீவின் பெரும்பகுதி, சுஸ்வாப் ஆகியவை வறட்சி அளவு 4-ல் உள்ளன.
மட்டுமின்றி பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பதினான்கு பகுதிகள் வறட்சி நிலை 2 அல்லது வறட்சி நிலை 1 -ன் கீழ் உள்ளன என மாகாண நிர்வாகம் கூறுகிறது.
மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீரைப் பாதுகாக்க பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொள்கின்றனர்.