மருந்தக ஊழியரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு தப்பிய நபர்
மாஸ்க் கட்டாயம் என வலியுறுத்திய மருந்தக ஊழியரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு தப்பிய நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறித்த சம்பவமானது ஜூன் 17 அன்று மாலை 4:45 மணியளவில் யோங் மற்றும் கார்ல்டன் வீதிகளில் உள்ள ஒரு கடையில் நடந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், அடையாளம் தெரியாத ஒருவர் கடைக்குள் புகுந்து, ஊழியருடன் மாஸ்க் அணிவது தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,
ஆனால் மருந்தகத்தில் இருந்து வெளியே வந்த குறித்த ஊழியரை அந்த நபர் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த ஊழியர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதாகவும், வாழ்க்கையை மாற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புதன்கிழமை சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டு, பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.