காங்கோவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் ; 1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
காங்கோ அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, எபோலா பாதிப்பு தொடர்பில் 4,200-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளதோடு1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நோயாளிகளை விரைவாக அடையாளம் காணுதல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்தல், மருத்துவ சிகிச்சையை விரிவுபடுத்துதல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், வைரஸ் ஏற்கனவே பரவத் தொடங்கியிருந்த காலம் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படுவதற்கு முன்னரே இருந்திருக்கலாம் என்பதால், நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது சுகாதார அதிகாரிகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
காங்கோவில் தற்போதைய எபோலா நிலைமையை WHO மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காங்கோவில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
கிழக்கு காங்கோவில் நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இதுவரை பதிவான எபோலா பாதிப்புகளில் மிக வேகமாகப் பரவும் பாதிப்புகளில் ஒன்றாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோவில் எபோலா பாதிப்பு மே மாதத்தின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எனினும், மரபணு வரிசைமுறை ஆய்வுகளின் அடிப்படையில், வைரஸ் பரவல் அதற்கு பல மாதங்களுக்கு முன்பே, அதாவது பெப்ரவரி மாதத்திலேயே தொடங்கியிருக்கலாம் என WHO தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட நோயாளிகளில் சிலருக்கு ஏற்பட்ட அறிகுறிகள் மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்திருந்ததால், அவர்கள் எபோலாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஆரம்பத்தில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.