கனடாவின் பணவீக்கம் குறித்து வெளியான தகவல்
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி அதிர்ச்சியின் முழு தாக்கத்தினால், கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஆண்டு பணவீக்க விகிதம் 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக 3 சதவீதத்தைத் தாண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்கான புதிய நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) தரவை வரும் வெளியிட உள்ளது. ராய்ட்டர்ஸ் நடத்திய பொருளாதார வல்லுநர்களின் கருத்துக்கணிப்பின்படி, மார்ச் மாதத்தில் 2.4 சதவீதமாக இருந்த முதன்மை பணவீக்க விகிதம், ஏப்ரலில் 3.1 சதவீதமாக கடுமையாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தின் இந்த திடீர் உயர்வுக்கு முக்கிய காரணம் பெட்ரோல் விலை அதிகரிப்பே என்று ராயல் வங்கி (RBC) பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மார்ச் மாதத்தில் 21 சதவீதம் உயர்ந்த பெட்ரோல் விலை, ஏப்ரல் மாதத்தில் மேலும் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடியது.
இதனால் வளைகுடா பிராந்தியத்திலிருந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கி, உலக சந்தையில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
ஏப்ரல் 2025-டன் நுகர்வோர் கார்பன் விலை குறைப்பு சலுகை முடிவுக்கு வந்ததும் இந்த பணவீக்க உயர்வுக்கு மற்றொரு காரணமாகும். கடந்த ஆண்டு வழக்கமான பெட்ரோல் விலையிலிருந்து சுமார் 18 காசுகள் குறைக்கப்பட்டிருந்ததால் பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது.
ஆனால், தற்போது அந்த நிவாரணம் ஒப்பிடப்படாது என்பதால் ஆண்டு பணவீக்க எண் உயர்ந்து காட்டும். கனடா வங்கி (Bank of Canada) தனது இலக்கான 1 முதல் 3 சதவீதத்திற்குள்ளேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக பணவீக்கத்தை வைத்திருந்தது. கடைசியாக டிசம்பர் 2023-இல் தான் பணவீக்கம் 3 சதவீதத்தைத் தாண்டியது.