கனேடிய மாகாணம் ஒன்றில் 50,000 கல்வித்துறை ஊழியர்களின் வேலைக்கு சிக்கல்
ஒன்ராறியோவில் கல்வித்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என காலக்கெடு அமுலுக்கு கொண்டு வந்தால் 50,000 ஊழியர்களை வரை வேலையில் இருந்து நீக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
குறித்த தகவலை மாகாணத்தின் கல்வி அமைச்சர் Stephen Lecce தெரிவித்துள்ளார். கேள்வி ஒன்றிற்கு பதிலளித்துள்ள கல்வி அமைச்சர் Lecce, ஒன்ராறியோவில் ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், கல்வித்துறையில் தடுப்பூசி கட்டாயம் என காலக்கெடு விதிக்கப்பட்டால் ஆயியக்கணக்கான ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்படும் என்றார்.
இதனால், கல்வித்துறை ஊழியர்கள் கட்டாயம் பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துகொள்வது முதன்மையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள், மற்றும் அலுவலக ஊழியர்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே, நமது கல்வி நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படாது என்றார். மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள், கட்டாயம் வாரம் இருமுறை பரிசோதனை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் வேலை பறிபோகும் சூழலில் இருக்கும் 50,000 ஊழியர்களில், ஆசிரியர்கள், கல்வி உதவியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர் எனவும் அமைச்சர் Lecce சுட்டிக்காட்டியுள்ளார்.