சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதனு ஏன் பெரியவங்க சொல்றாங்க தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Water
Health tips
By Logeswari
உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்று பலமுறை பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் அதற்கான காரணம் நமக்கு புலப்படுவது இல்லை.
நம்மில் பெரும்பாலோர் உணவு உண்டு, கை கழுவிய உடனே நீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்.
அவ்வாறு செய்வதால் நீரிழிவு நோய் உண்டாகும் என்று கூறுவார்கள். சரி வாங்க சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..
தீமைகள்:-
- உணவில் உள்ள புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு நேரம் கொடுக்க வேண்டும். சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது இந்த செயல்முறையை பாதிக்கிறது. எனவே உணவு சாப்பிட்ட பிறகு சுமார் 30 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
- நாம் உண்ணும் உணவு ஜீரணிக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆகும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். உணவு நமது உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குச் சென்று மலமாக வெளியேறும் முன் குடலுக்குச் செல்கிறது.
- இந்த நேரத்தில் வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் திரவம் அஜீரணத்திற்கு உதவுகிறது. இந்த செயல்முறை உணவுக்கும் தண்ணீருக்கும் உள்ள வித்தியாசத்தால் பாதிக்கப்படுகிறது.
- சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகள் மற்றும் உடல் வெப்பநிலையையும் பாதிக்கிறது.
- அதுபோல இனிப்பு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் திடீரென்று உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். சர்க்கரை அளவை அதிகரிக்க மட்டுமே நீர் வேலை செய்கிறது. தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US