ரொறன்ரோவில் முக்கிய பிரபலத்தின் சிலையை உடைத்து சேதப்படுத்திய மக்கள்
ரொறன்ரோ ரைர்சன் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈகெர்டன் ரைர்சன் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
குறித்த சிலையானது அதே இடத்தில் நிறுவவோ அல்லது வேறு பகுதிக்கு மாற்றவோ திட்டமில்லை என ரைர்சன் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
உண்டுறை பள்ளியில் சிக்கி பரிதாபமாக பலியான பூர்வக்குடி சிறார்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் ஈகெர்டன் ரைர்சன் சிலை சேதப்படுத்தப்பட்டது. மேலும், ஒன்ராறியோவில் ரைர்சன் பெயரில் அமைந்துள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
கனடாவின் முக்கிய கல்வியாளரான ஈகெர்டன் ரைர்சன் உண்டுறை பள்ளி முறையை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர்.
பல ஆண்டுகள் கடந்திருந்தாலும் ஈகெர்டன் ரைர்சன் சிலையை உடைத்து சேதப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்கு உரியது என சமூக ஊடகங்களில் பலர் வரவேற்றுள்ளனர்.