ஓமிக்ரான் தொற்று... பிரான்சில் எட்டு பேர் சந்தேகத்தில்
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் (Omicron) தொற்றானது பிரான்சில் எட்டு பேருக்கு தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தெற்கு ஆபிரிக்காவின் பொஸ்வானாவில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட வீரியம் மிகுந்த ஓமிக்ரான் தொற்றானது, தற்போது உலக நாடுகளை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது.
பிரித்தானியா, அமெரிக்கா, முக்கிய ஐரோப்பிய நாடுகள் என நேரடி விமான சேவையை தடை செய்துள்ளதுடன், இஸ்ரேல் முதல் நாடாக தங்கள் நாட்டின் சர்வதேச எல்லைகளை மூடியுள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் கிழக்காசிய நாடான ஜப்பானும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்க இருப்பதுடன், சர்வதேச எல்லைகளையும் மூட உள்ளது.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகாதார இயக்குனரகம் பிரான்சில் ஓமிக்ரான் பரவல் தொடர்பில் சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.
முதல்கட்டமாக 48 மணிநேரங்கள் தென்னாபிரிக்காவில் இருந்து பிரான்சுக்கு வர தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரான்சில் இந்த ஓமிக்ரான் மாறுபாடு பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்காக எட்டு பேரினை தனிமைப்படுத்தலுக்கு உபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், சிலமணிநேரங்களில் அதன் முடிவு வெளியாகும் எனவும் இயக்குனரகம் அறிவித்துள்ளது.