டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு புதிய விதிகளை விதித்த எலன் மஸ்க்!
டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலன் மஸ்க்(Elon Musk) ஆறு புதிய விதிகளை தமது ஊழியர்களுக்கு விதித்துள்ளார்.
தமது ஊழியர்கள் உற்பத்தியை அதிகரிக்க தேவையற்ற சந்திப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற சந்திப்புகளால் எந்தவித பங்களிப்பும் இல்லை என்றும் அவர் கருதுகிறார்.
இந்நிலையில் உற்பத்திக்கு உதவாத இதுபோன்ற கூட்டங்கள் தேவையின்றி நேரத்தை வீணடிப்பதாக அவர் தமது ஊழியர்களுக்கு இ மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் கடுமையான உழைப்பில் கவனம் செலுத்துமாறும் எலன் மஸ்க்(Elon Musk) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அண்மையில் 1200 ஊழியர்கள் கெடுபிடிகளை விரும்பாமல் ராஜினாமா செய்துள்ளனர்.