மாணவர்களுடன் தகாத நடத்தை: தொடக்கப் பள்ளி ஆசிரியர் இடைநீக்கம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில், பாடசாலை மாணவர்களுடன் சமூக ஊடகத்தில் தவறாக நடந்து கொண்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
குறித்த ஆசிரியர், இன்ஸ்டாகிராமில் மாணவர்களுடன் அரட்டையடிக்கும்போது, ஒரு மாணவனைப் பற்றிய ரகசிய தகவலை மற்றொரு மாணவருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பள்ளி மாவட்டம் 43ல் Erik Oun என்ற தொடக்க பள்ளி ஆசிரியர், 2018-2019 ஆண்டில் இன்ஸ்டாகிராமில் இரண்டு 5ம் வகுப்பு மாணவர்களுடன் அரட்டையடிப்பதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.
மட்டுமின்றி, மாணவர்களிடம் அவர்களின் வயதுக்கு ஏற்றார்போல அவர் உரையாடவில்லை என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
ஆனால், பெற்றோர்களிடம் இருந்து அனுமதி பெறப்பட்ட பின்னரே, தாம் மாணவர்களுடன் அரட்டையடித்ததாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாணவருடன் அந்த ஆசிரியர் பயன்படுத்திய வார்த்தைகள் அருவருப்பானது என குறிப்பிட்டுள்ள அந்த மாணவரின் தாயார், உடனடியாக உரையாடலை நிறுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி ஆசிரியர் Erik Oun மாணவர்களை ஆரத்தழுவும் பழக்கம் கொண்டவர் எனவும், அதில் ஒரு மாணவருக்கு அவர் அடிக்கடி குறுந்தகவல் அனுப்பியுள்ளார் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, குறித்த ஆசிரியருக்கு 6 மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவு வெளியாகியுள்ளது.