ஊழியர்கள் தொடர்பில் எலான் மஸ்க் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்பில் அதிரடித் தீர்மானம் எடுத்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் பணியாளர்கள் அலுவலகத்தில் நேரில் வந்து பணியாற்ற வேண்டுமெனவும் அவ்வாறு தவறுபவர்கள் நிறுவனத்தை விட்டு விலக வேண்டுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.
ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 40 மணித்தியாலங்கள் டெஸ்லா நிறுவனத்தின் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் இல்லையன்ன்றால் டெஸ்லாவை விட்டு விலக வேண்டும் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
பணியாளர்களின் பிரதான பணியிடம் அலுவலகம் எனவும் அதிலிருந்து பணியாற்றும் போதே ஏனைய பணியாளர்களுடன் தொடர்பாட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் அநேக நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீடுகளில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு மஸ்க் அனுப்பி வைத்த மின்னஞ்சல்கள் பற்றிய தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
இதில் பணியாளர்களை மிரட்டும் தோரணையில் மஸ்க் மின்னஞ்சல் அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டெஸ்லா நிறுவனத்தை ஆரம்பித்த காலங்களில் தாம் உற்பத்திச்சாலையிலேயே தங்கியிருந்த்தாகவும் அவ்வாறு செய்திருக்கவில்லை என்றால் நிறுவனம் வங்குரோத்து அடைந்திருக்கும் எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்குவித்து வரும் நிலைலயில் மஸ்க் இவ்வாறு பணியாளர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.