காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை விட்டு வெளியேறிய ஊழியர்கள்!
ஆப்கானிஸ்தானின் காபூல் தூதரகத்தில் உள்ள அமெரிக்க கொடி இறக்கப்பட்ட நிலையில் ஊழியர்களும் விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து இருந்து அமெரிக்க படை விலகியதை அடுத்து, முழு ஆதிக்கம் செலுத்திய தாலிபான்கள், நேற்று தலைநகர் காபூலை கைப்பற்றினர். தற்போது அந்நாட்டின் அதிபர் மாளிகையும் தாலிபான்கள் வசமாகியுள்ளது.
இந்த நிலையில், அந்நாட்டின் பெயர் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விரைவில் அதிபர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வரும் என தாலிபான்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆகியவை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து சிவில் மற்றும் இராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்கா மற்றும் கூட்டாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தைப் பாதுகாப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை நிறைவு செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில், நாங்கள் எங்கள் பாதுகாப்பு இருப்பை கிட்டத்தட்ட 6,000 படையினருக்கு விரிவுபடுத்துவோம், இந்த முயற்சிகளை எளிதாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வோம் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்களையும், காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உள்ளூர் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மற்றும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய ஆப்கானிஸ்தான் நாட்டினரை அமெரிக்கா நாட்டை விட்டு வெளியேற்றும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
வியாழக்கிழமை வரை சுமார் 4,200 பேர் அமெரிக்க தூதரகத்தில் இருந்தனர்.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பிறகு, அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அகற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் உண்மையான பணி நிறைவேறியது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.