இந்தியாவில் பரவிவரும் உருமாறிய கொரோனா கவலையளிக்கிறது - பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்
இந்தியாவில் மிகவும் மோசமாக பரவி வரும் உருமாறிய கொரோனா மிகுந்த கவலை அளிப்பதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் இரண்டாவது அலையில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வகை உருமாறிய கொரோனா வைரஸ் பி1. 617.2 என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வகை கொரோனா வைரஸ் உலகின் 20-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக, பிரித்தானிய நாட்டில் இந்தியவகை உருமாறிய கொரோனா வேகமாக பரவுகிறது. இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இங்கிலாந்தில் உள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவது தொடர்பான முடிவில் நாட்டில் பரவி வரும் இந்திய வகை கொரோனா வைரஸ் கடுமையான இடையூறுகளை விளைவிக்கக்கூடும்.
ஜூலை 21-ம் தேதி முழுமையான தளர்வுகளை அமல்படுத்துவது சந்தேகத்திற்கு உரியது. புதிய வகை கொரோனா வைரஸ் முழுமையான தளர்வுகளை அமல்படுத்துவதில் மிகப்பெரிய தடையாக இருக்கக்கூடும். இந்த வகை கொரோனா வடகிழக்கு இங்கிலாந்து, லண்டனில் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இது மிகவும் கவலையளிக்கக்கூடிய வகையில் உள்ளது.
மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.
புதியவகை கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகளை வேகப்படுத்த உள்ளோம்’ என்றார்.