கடலில் அடித்துச் செல்லப்பட்ட கண்டெய்னர்களால் பாரிய சுற்றுச்சூழல் அழிவு!
பிரிட்டிஷ் கொலம்பிய கடற்பரப்பில் இடம்பெற்ற கப்பல் விபத்தில் பாரிய சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்தினால் குறிப்பாக கடற்பரப்பிற்கு பாரியளவில் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவது,
இரசாயனங்களை ஏற்றிக்கொண்டு வான்கூவர் தீவின் அருகில் பயணித்துக்கொண்டிருந்த MV Zim Kingston என்ற சரக்குக் கப்பல் பிரிட்டிஷ் கொலம்பிய கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது. 100க்கும் அதிகமான கண்டெய்னர்கள் கடல் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
கடல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கண்டெய்னர்களில் 2 யில் அபாயகரமான பொருட்கள் இருப்பதாகவும், மற்றவற்றில் பொம்மைகள், துணிமணிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் மரச்சாமான்கள் முதலான பொருட்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்துள்ளனர்.