யூரோ மில்லியன் ஜாக்பாட்: 185 மில்லியன் டொலர் தொகையை வென்ற அதிர்ஷ்டசாலி
வெள்ளிக்கிழமை வெளியான யூரோ மில்லியன் ஜாக்பாட் முடிவில், பிரித்தானியர் ஒருவர் முதல் பரிசை அள்ளிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அதிர்ஷ்டசாலி மொத்தமாக 185 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை அள்ளிச் சென்றுள்ளார். தேசிய லொட்டரியில் மிகப்பெரிய தொகையை அள்ளும் மூன்றாவது நபர் இவர் என கூறப்படுகிறது.
வெற்றி பெற்றவர் தற்போது உரிமை கோரியுள்ள நிலையில், அவருக்கு உரிய தொகையை கையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
வெற்றி இலக்கம் மற்றும் சீட்டு ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர், தொகை கையளிக்கப்படும் எனவும், வெற்றி பெற்றவருக்கு விருப்பம் இருந்தால் மட்டும் அவர் புகைப்படம் வெளியிடப்படும் எனவும் நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் பிரிட்டனில் இது ஆறாவது யூரோ மில்லியன் ஜாக்பாட் வெற்றியாளர் எனவும்,
ஜூலை 19ம் திகதி ஒருவருக்கு 195 மில்லியன் பவுண்டுகள் பரிசாக வென்றார் எனவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.