அரண்மனையில் கருணைக்கொலை; பெரும் கவலையில் மகாராணியார்!
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், செல்லப்பிராணிகள் மீது அதீத அன்பு கொண்டவர்.
தற்போது அவர் தொடர்ச்சியாக தன் செல்லப்பிராணிகளை இழந்து வரும் நிலையில் கடந்த வருடத்தில் அவரின் இரண்டு செல்ல நாய் குட்டிகள் இறந்தது.
இந்நிலையில், அவரின் 26 அன்ன பறவைகளை கருணைக் கொலை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் , அது குறித்து மகாராணி அதிக வேதனையடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
காராணியின் அன்னப்பறவைகளில் ஆறு பறவைகள் பறவை காய்ச்சலால் பலியானதுடன் நேற்றும் ஒரு அன்னப்பறவை பலியானது.
இதன் காரணமாக மேலும் பறவை காய்ச்சல் உண்டாகக்கூடும் என்ற பயத்தில் 26 பறவைகளை கால்நடை மருத்துவர்கள் கருணைக் கொலை செய்தனர்.
இந்நிலையில் மொத்தமாக 33 பறவைகளை இழந்து மகாராணியார் பெரும் கவலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.