3 நாய்களை கருணைக்கொலை செய்ய அனுமதி அளித்த ஒன்ராறியோ நீதிமன்றம்
ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் நாய்கள் கூட்டமாக தாக்கியதில் பரிதாபமாக இளம்பெண் மரணமடைந்த விவகாரத்தில் நீதிமன்றம் முக்கிய முடிவெடுத்துள்ளது.
லண்டனின் Muncey பகுதியில் நாய்கள் தாக்கியதில் 17 வயதேயான மேகன் பிஷர் பரிதாபமாக மரணமடைந்தார்.
இந்த விவகாரத்தில் பொலிசார் மூன்று நாய்களை பிடித்து Glencoe பகுதியில் அமைந்துள்ள மிருகங்களுக்கான காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ஏப்ரல் 1ம் திகதி நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த மூன்று நாய்களையும் கருணைக்கொலை செய்ய கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு நாய்களின் உரிமையாளர் தொடர்பிலும் மறுப்பு தெரிவிக்கப்படாத நிலையில், தற்போது அந்த நாய்களை கருணைக்கொலைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வாரத்தில் கால்நடை மருத்துவர் ஒருவரால் கருணைக்கொலை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒன்ராறியோ மாகாண காவல்துறை மேகன் பிஷர் மரணம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றே கூறப்படுகிறது.