பட்டாசு ஆலையில் பாரிய வெடிவிபத்து: 18 பேரின் உடல்கள் கண்டெடுப்பு!
தாய்லாந்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வெடிப்பு சம்பவம் இன்றைய தினம் (17-01-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 18 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை இன்னும் சரிபார்த்து வருவதாக AFP அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன, எத்தனை பேர் இறந்தனர் என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம்,” என்று பொலிஸ் கர்னல் தீரபோஜ் ரவாங்பன் AFP-யிடம் கூறியுள்ளார்.
வெடிவிபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடி விபத்து தொடர்பில் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.