ரொறன்ரோவில் பெண்ணிடம் அருவருப்பாக நடந்து கொண்ட நபர்: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்
ரொறன்ரோ மருத்துவமனையில் கடந்த வாரம் பெண் ஒருவரிடம் அருவருப்பாக நடந்து கொண்ட நபர் தொடர்பில் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர் பொலிசார்.
ரொறன்ரோ பொது மருத்துவமனையில் பெண்ணிடம் அருவருப்பாக நடந்து கொண்ட நபர் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பொலிசாருக்கு புகார் கிடைத்துள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த தகவலில், அந்த நபர் குறித்த மருத்துவமனை பெண் ஊழியரை பின் தொடர்ந்துள்ளதாகவும், மருத்துவமனையின் வாகனம் நிறுத்துமிடம் வரையில் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது.
பின்னர் குறித்த பெண்ணிடம் அந்த நபர் மிக அருவருப்பாக நடந்து கொண்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த நபர் எலிசபெத் தெருவில் இன்னொரு பெண்ணை குறிவைத்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.