ஆப்கானில் இருந்து வெளியேற்றம்; வரலாற்றில் இடம்பெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரியின் புகைப்படம்!
ஆப்கானிலிருந்து புறப்பட்ட சி-17 போக்குவரத்து விமானத்தில் தனது துப்பாக்கியுடன் ஏறிய அமெரிக்க வான்வழிப்பிரிவின் 82 வது படையணியின் மேஜர் ஜெனரல் கிறிஸ் டொனாகு ஆப்கானிலிருந்து இறுதியாக வெளியேறிய படைவீரர் என வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
நள்ளிரவிற்கு ஒருநிமிடத்திற்கு முன்னர் பச்சை மற்றும் கருப்பு உடையில் காபுலின் ஹமிட் ஹர்சாய் விமானநிலைய ஓடுபாதையில் தரித்து நிற்கும் விமானத்தை நோக்கி அவர் செல்வதை இரவு பார்வை சாதனத்தின் உதவியுடன் படமாக்கியுள்ளனர்.
ஆப்கானில் அமெரிக்காவின் 20 வருட இராணுவபிரசன்னம் முடிவிற்கு வந்து சில மணித்தியாலங்களில் பென்டகன் வெளியிட்டுள்ளது. டோனாஹ வின் அந்த நிமிடத்தை வரலாற்றில் - 1989இல் சோவியத்தின் இராணுவம் வெளியேறியவேளை உஸ்பெக்கிஸ்தானின் நட்புறவுப்பாலத்தை கடந்து சென்ற சோவியத்தின் இராணுவ வாகனங்களிற்கு தலைமைதாங்கிய சோவியத்தின் இராணுவ அதிகாரியுடன் ஒப்பிடலாம்.
தனது சகாக்களுடன் இணைந்துமுன்னெடுக்கப்பட்ட இராணுவநடவடிக்கையை முடிவிற்கு கொண்டுவந்த பின்னர் ஆப்கானிலிருந்து 123000 பொதுமக்களை வெளியேற்றிய பின்னர் நள்ளிரவில் அமெரிக்க படையினருடன் இறுதி விமானம் புறப்பட்டது. அது ஒரு படமாக காணப்பட்டாலும் டொனாஹ வேகமாக முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் விமானத்தை நோக்கி செல்கின்றார்.
அவர் போர்வீரன் ஒருவனின் ஆடைகளை அணிந்திருக்கின்றார் அவரது தலைக்கவசத்தின் மீது இரவுபார்வை சாதனம் காணப்படுகின்றது. அத்துடன் அவரது கையில் துப்பாக்கி காணப்படுகின்றது அவர் ஆப்கானிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டும். இதற்கு மாறானதாக 1989 இல் எடுக்கப்பட்ட சோவியத் இராணுவத்தின் 40வது படைப்பிரிவின் தளபதி ஜெனரல் பொறிஸ் கிரமோவின் படம் காணப்பட்டது.
அவர் தனது மகனுடன் பாலத்தை கடந்து கையில் மலர்க்கொத்துக்களுடன் அமுடர்யா ஆற்று பகுதியை நோக்கி சென்றார். சாம்ராஜ்ஜியங்களின் புதைகுழியாக மாறிவிட்ட நாட்டிலிருந்து சோவியத்யூனியனும் அமெரிக்காவும் வெளியேறிய விதங்கள் மாறுபட்டவையாக காணப்படுகின்றன. ஆனால் அவர்கள் 1842 இல் இடம்பெற்ற முதல் ஆங்கிலோ ஆப்கான் போரில் பிரிட்டன் சந்தித்த மோசமான தோல்வியை தவிர்த்துக்கொண்டனர்.
அந்த மோதலின் உறுதியான படமாக எலிசபெத் தொம்சனின் இராணுவத்தின் எச்சங்கள் காணப்படுகின்றது. காபுலில் இருந்து பின்வாங்கும்போது மிகவும் களைத்துப்போன குதிரையில் அறுவை சிசிச்சை நிபுணர் வில்லியம் பிரைடன் களைத்துப்போன நிலையில் காணப்படுவதை அது காண்பிக்கின்றது. ரஸ்ய இராணுவம் வெளியேறியவேளை காபுலில் மொஸ்கோ ஆதரவு கம்யுனிஸ்ட் அரசாங்கம் காபுலில் ஆட்சியில் காணப்பட்டதுடன் மூன்று வருடங்களிற்கு அது போரிட்டது.
ஆனால் அமெரிக்க சார்பு ஆப்கான் அரசாங்கம் ஏற்கனவே சரணடைந்த நிலையில், அமெரிக்க படையினர் வெளியேறவேண்டிய 31 ம் திகதி காலக்கெடுவிற்கு இரண்டுவாரங்களிற்கு முன்னரே தலிபான் காபுலை கைப்பற்றிவிட்டது. ஒரு ஒழுங்கான வெளியேற்றத்தின் போது-ரஸ்ய இராணுவ அதிகாரியின் 50இ000 படையினரும் உஸ்பெக்கிஸ்தான் எல்லையை நோக்கி சென்றவேளையிலும் சிறிய சிறிய தாக்குதல்களை சந்தித்தனர்.
அதோடு தங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக முஜாஹீதீன்களிற்கு அவர்கள் பணம் வழங்கினார்கள். 1989 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் குருமோவின் படையணிகள் நட்புறவு பாலத்தை கடந்தனர்- ஆப்கானில் சோவியத்யூனியனின் 10 வருட வரலாற்றை முடிவிற்கு கொண்டுவந்தனர் - இதன்போது 14,450 சோவியத் படையினர் கொல்லப்பட்டனர். மீண்டும் சோவியத்யூனியனிற்கு வந்து சேர்ந்தது குறித்து கேள்வி எழுப்பியவேளை நாங்கள் எங்கள் கடமையை செய்துவிட்டு திரும்பிவந்துவிட்டது குறித்து மகிழ்ச்சி என குரோமோவ் தெரிவித்தார்.
நான் திரும்பி பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டார். எத்தனை பேர் வெளியேற்றப்பட்டனர் எத்தனை பேர் கைவிடப்பட்டனர் என்பதை அடிப்படையாக வைத்தே அமெரிக்காவின் விலக்கல் நடவடிக்கைகள் வெற்றியா என்பது தீர்மானிக்கப்படும். டொனாஹ_வும் அவரது சகாக்களும் இறுதி நாட்களின் மனதிற்கு வலியை ஏற்படுத்தும் படங்களை இன்னமும் தங்களுடன் வைத்திருக்கின்றனர்.
இதேவேளை முள்வேலிக்கு அப்பால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வழங்குவது பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து இரண்டு ஆப்கானியர்கள் விழுவது,அதனைவிட மோசமாக ஐஎஸ் அமைப்பின் விமானநிலையத்தின் தாக்குதல் என்பனவும் வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவங்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது .
