ஜேர்மனில் புதிய கட்டுப்பாடுகளோடு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு
ஜேர்மனியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் அறிவித்தார்.
பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டது. பூஸ்டர் டோஸ் செலுத்தியதற்கான ஆதாரம் அல்லது கரோனா நெகட்டிவ் சான்றிதழ்களுடன் வருபவர்களை மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
பிப்ரவரி நடுப்பகுதியில் ஒமிக்ரோன் நோய்த்தொற்றுகளின் பரவல் அதிகரிக்கும் என்று சிறப்பு சுகாதாரக் குழுவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.
வைரஸ் பரவலைக் குறைக்கும் சூழலில், கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.